தம்பி இங்க வாப்பா
என்று நான் அழைக்க
மற்றவர்கள் சாமி என்று கோவில் அர்ச்சகரை அழைக்க
+++++++
அந்த தம்பி அந்த கோவிலில் இருந்து பெரிய கோவிலுக்கு செல்ல
அந்த இடம் காலி (vaccant) ஆக..
அதை நிரப்ப ஆள் இல்லாமல் இருக்க..
வேறு (சாதி) யாராவது வந்துவிட போகிறார்கள் என நினைக்க
வேலை வெட்டி இல்லாமல் ஒரு கிழவன் கிடக்க..
அவன் பிழைப்புக்கு வழி செய்தது போல இருக்க
பிற சாதியிடம் இடம் செல்லாமல் தடுக்க ..
சாதி சங்கம் சதி செய்ய..
அவனை வலுக்கட்டாயமாக அர்ச்சகராக்க
அவன் சம்ஸ்கிருத மந்திரங்கள் சடங்குகள் தெரியாமல் தவிக்க..
சாதி சங்கம் நாலு ஆட்களை அனுப்ப..
அவனுக்காக மந்திரங்களை நோட்டு புத்தகங்களை பார்த்து படித்து ஒத்து ஊத..
பூஜைக்கு குடத்தை எடுப்பதா பூவை எடுப்பதா என அவன் தவிக்க..
அருகே இருந்த தினமும் வரும் பக்தகோடி பெண்கள்
சாமி அது இல்ல சாமி இது
என சரியா அவனுக்கு சொல்லி கொடுக்க..
அவன் அவைகளை தடுமாறி தடுமாறி எடுக்க..
குழப்பத்தில் பூஜைகள் இனிதே நிறைவேறியது..
சைக்கிளில் வந்த அர்ச்சகர்
ஆறு மாதத்தில்
இரு சக்கர வாகனம் வாங்கிவிட்டார்.